டிரான்ஸ்பர் வாங்கி சென்ற ஆசிரியரே தான் வேண்டும் என்று சாலைமறியல் செய்த மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது . இப்பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக நாராயணன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இப்பள்ளியில் அதிக மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டி வந்தவர். பல மாணவர்களை கல்வி பயில தூண்டுகோலாய் இருந்தவர், இதனால் இவர் கிராம மக்களிடம் பெரிய மரியாதையை பெற்றிருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடந்த கவுன்சிலிங்கில் வேறொரு பள்ளிக்கு மாறுதல் வாங்கி சென்று விட்டார் , நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு நாராயணன் மாறுதல் ஆகி சென்றதை அறிந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், மேலும் பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் செய்தனர். மீண்டும் அந்த ஆசிரியரே இந்த பள்ளிக்கு வேண்டும் என்று போராடினர்.
தாசில்தார் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைப்பதாகவும் , நாராயணனை மீண்டும் இப்பள்ளிக்கே வருவதற்கு அவரிடம் பேசுவதாகவும் உறுதியளித்த பின்னரே போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது
ஒவ்வொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் இதை போல இருந்து விட்டால் போதும் நாடே செழித்துவிடும்.
சிறந்த அரசு அமைய அரசு அதிகாரிகளின் துணை வேண்டும் என்பதை மெய்பித்து காட்டி சிறந்த ஆசிரியராக திகழும் திரு.நாராயணன் அவர்களை ஒரு லைக் போட்டு வாழ்த்துவோம்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.