"ஊபதேசம் ஊருக்கு மட்டும் தான்" என்றொரு பழமொழி உண்டு . அது போல பல தலைவர்கள் ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்து கொண்டு தங்கள் செயல்களில் காட்டமாட்டார்கள் . ஆனால் மோடி இந்த விதத்தில் வித்தியாசமாக உள்ளார் .
பணவீக்கத்தை கட்டுபடுத்த தனது அமைச்சரவை அமைச்சர்களையும் சிக்கனமாக செலவு செய்ய வலியுறுத்தி உள்ளார் . இது தொடர்பாக தனது அமைச்சர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
அந்த அறிக்கையின் படி 1 லட்சத்திற்கு மேல் எந்த பொருள் வாங்கினாலும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்ற பின்னரே வாங்க வேண்டும் . இப்போது உள்ள நிலையில் டாட்டா நானோ கார் கூட ஒரு லட்சம் ரூபாய்க்கு கிடைப்பதில்லை .
இந்த நிலையில் இந்த அறிக்கை பல அமைச்சர்களின் வயிற்றில் கண்டிப்பாக புளியைக் கரைத்து இருக்கும் ..
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.