BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 6 July 2014

கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற போகிறேன் : உலகின் நம்பர் 1 ஆல் ரவுண்டர் மிரட்டல்

வங்கதேச கிரிக்கெட் அணி என்றாலே நம் அனைவரின் நினைவிற்கும் வரும் வீரர் அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தான். இவர் உலக அளவில் மிக சிறந்த ஆல் ரவுண்டர். இந்த முறை கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டார். அவர் இப்போது கரீபியன் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் சென்று உள்ளார். அவை வரும் 11 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடக்கும். ஆனால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடக்கும் பயிற்சி முகாமில் அனைத்து வீரர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் சண்டிகா தெரிவித்து இருந்தார். இதனால் ஷாகிப் பாதியிலையே இதில் இருந்து விலக வேண்டி வரும். இதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து உள்ளார்.



இது ஒரு நல்ல வீரரின் பதில் இவ்விதமாக இருக்காது. ஒரு வீரர் எப்போதுமே தனது நாடுக்கு விளையாடுவதையே சிறப்பாக நினைக்க வேண்டும் . ஆனால் எல்லாம் இப்போது பணத்திற்காக விளையாட மாறி விட்டார்கள். இவர் ஏற்கனவே கிரிக்கெட் போட்டியின் போது தவறாக நடந்து கொண்டதற்காக சில ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டார்.


இவரை அணியில் இருந்து தூக்கி இது போன்ற வீரகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media