BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 6 July 2014

3 மணி நேரத்தில் 2 இலட்சம் சப்பாத்தி, 6 டன் குழம்பு, 5 டன் சாதம் தயாரிக்கும் கிச்சன்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அக்ஷ்யா பாத்ரா அறக்கட்டளையால் தொடங்கப்பட்டுள்ள இந்த் கிச்சனில் 3 மணி நேரத்தில்  2 இலட்சம் சப்பாத்தி, 6 டன் குழம்பு, 5 டன் சாதம் தயாரிக்கப்படுகிறது. இது தான் வட இந்தியாவின் மிக பெரிய கிச்சன் ஆகும். இதன் மூலம் 1400 பள்ளிகளில் உள்ள 1.5 இலட்சம் மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.இதனை மதிய உணவு திட்டத்தின் மூலம் வழங்குகிறார்கள். இவர்கள் இதற்காக 400 விவசாயிகளுக்கு நவீன விவசாய தொழில்நுட்பங்களை சொல்லி தந்து உள்ளார்கள் . 3000 மாணவர்களுக்கு காய்கறிகளில் உள்ள சத்துகளை பற்றி விளக்கி சொல்லி  உள்ளார்கள்.




இதனை பார்வையிடுவதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் 16 ஆம் தேதி  வருகிறார். இதில் அவரும் ஒரு ஸ்பான்சராகும், அதனை உலக தரத்திற்கு மாற்றுவதற்கும் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.



இது மிகவும் பாராட்டப்படிய வேண்டிய திட்டம் ஆகும். எனவே அவர்களுக்கு நமது பாராட்டுகள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media