மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருப்பவர் குமாராசாமி. இவர் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மகனும் ஆவார். இவர் 2006 முதல் 2007 வரை கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். இப்போது இங்கு மேல் சபை தேர்தல் நடைபெற உள்ளது. குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்பிய விஜிகவுடா பாட்டீல் என்பவர் குமாராசாமியிட அவரது கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை கேட்டு உள்ளார். அதற்கு அவர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்கும் 1 கோடி என 40 கோடி கேட்டு உள்ளார் . பின்பு சிறிது இறங்கி வந்து 20 கோடி கேட்டு உள்ளார்.இந்த உரையாடல் தொடர்பான 35 நிமிட வீடியோ இன்று லோக்கல் சேனலில் வெளிவந்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து குமாராசாமியிடம் கேட்ட போது , அவர் அது தன்னுடைய குரல் தான். அது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை, தேர்தலில் ஆதரவு அளிப்பதற்கு எல்லா கட்சிகளிளும் பேரம் நடக்கும் என்றார். இதற்கு காங்கிரஸ் பாஜக போன்ற கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
குற்றம் செய்து விட்டு அதனை தவறு என்று ஒத்து கொண்டவனையாவது மன்னிக்க தோன்றும் , ஆனால் குற்றமும் செய்து விட்ட தான் செய்தது குற்றம் இல்லை என்று சொல்பவனை என்ன செய்ய தோன்றும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.