திருவள்ளுர் மாவட்டம் உப்பரப்பாளயத்தில் சுற்று சுவர் இடிந்து விழுந்து 11 பேர் பலியாகினர். அந்த ஊரில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதில் அந்த கிடங்கு அருகே குடிசை போட்டு வாழ்ந்து வந்த 11 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் . இதில் குழந்தைகள் உள்பட 10 பேர் இன்னும் சிக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதில் நாகராஜன் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.
மீட்பு குழுவினரும் தீயணைப்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்து மீட்பு பணி முடிந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் இந்த விபத்து நடந்து உள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இப்போ வர கட்டிடம் எல்லாம், பில்டிங்கும் வீக்கா இருக்கு, பேஸ்மென்ட்டும் வீக்கா இருக்கு
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.