BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 6 July 2014

கட்டிட விபத்தில் புதிய திருப்பம் : கை , காலுக்கு உடல் கிடைக்கவில்லை

கடந்த வாரம் சனிக்கிழமை அன்று மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.  இதில் பலர் சிக்கி கொண்டனர். ஒரு வாரமாக நடைபெற்ற மீட்பு பணியில் 61 பேர் பலியாகினர் மற்றும் 27 பேர் உயிருடன் காப்பாற்றபட்டனர் என்னும் தகவல் வந்தது. ஆனால் இப்போது அதில் புதிய மாற்றம் வந்து உள்ளது. 60 உடல்களை போஸ்ட்மார்டம் செய்து விட்டார்கள். ஆனால் மீதம் உள்ள ஒன்றுக்கு உடல் கிடைக்கவில்லை. அவர்களிடம் ஒருவரின் கையும் காலும் உள்ளது. ஆனால் அதனுடைய உடல் இல்லை. அதனால் அது யார் என்பது தெரியவில்லை.



ஒருவரின் உடல் கிடைக்காததால் பலி எண்ணிக்கை 61 இல் இருந்து 60 ஆக குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கை கால்கள் யாருடையது என்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media