நாளுக்கு நாள் இந்தியாவில் கற்பழிப்பு சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. தினம் ஒரு கற்பழிப்பு சம்பவம் இல்லாமல் செய்திகளும் , செய்திதாள்களும் வருவதில்லை. ஆனால் நாம் அதனை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்காமலே இருந்து வருகிறோம். இப்படியே சென்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறிவிடுமோ என்கிற அச்சம் உள்ளது. ஆனால் இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் முலாயம் சிங் போன்ற தலைவர்கள் முட்டாள்தனமாக சர்சைக்குரிய கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இங்கு தான் தினம் ஒரு கற்பழிப்பு நடந்து வருகிறது. இந்தியாவிலே இங்கு தான் அதிக குற்றங்கள் நடக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள முலாயம் சிங் , உபி மக்கள் தொகையில் மிக பெரிய மாநிலம். அதனால் தான் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு அதிக குற்றங்கள் நடக்கிறது என்று கூறியுள்ளார்.
தவறுகளை திருத்தி கொள்ளாமல் தவறை மறைப்பதற்கு காரணம் சொல்லி வருகிறார், இந்த லட்சனத்தில் சென்றால் நம் நிலைமை கோவிந்தா தான்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.