BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 20 July 2014

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இறந்த பயணிகளின் உடல்களை தூக்கிச் சென்ற கிளர்ச்சியாளர்கள் !!



மலேசிய வெடித்து விழுந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை கிளர்சியாளர்கள் தூக்கிச் சென்று விட்டதாக உக்ரேன் அவசர உதவி மைய அதிகாரிகள் தெரிவித்தனர் . '

அங்கே இருந்த பத்திரிக்கை நிரூபர் ஒருவர் கூறுகையில், சனிக்கிழமை அவர் கிளர்சியாளர்கள் உடல்களை வண்டியில் ஏற்றுவதை பார்த்ததாக கூறினார் . இன்று அவர் எந்த உடல்களையும் பார்க்கவில்லை என்றும் உடல்களின் பாகங்களை மட்டும் பணியாளர்கள் தேடிக் கொண்டு இருப்பதாக கூறினார் .

உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர் கூறுகையில் , அவர்கள் எங்களை மிரட்டியதால் உடலை ஒப்படைத்து விட்டோம் . அவர்களிடம் ஆயுதம் இருந்ததால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றார் .

உடலை எதற்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்பது பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media