ஆபாச இணையதளங்களை தடுக்க முடியாமல் திணறி வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் மொத்தம் 4 கோடி ஆபாச இணையதளங்கள் உள்ளன. மத்திய அரசு அதில் ஏதாவது ஒன்றை இணையத்தில் தடுத்தால் புதிதாக ஒன்று வந்துவிடுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த இணையதளங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இயங்க கூடியவை.
இந்த இணையதளங்களில் உள்ள வீடியோக்கள் இளைஞர்களை அதிகம் பாதிக்கும் வண்ணம் உள்ளது. அதனால் தான் பெண்களுக்கு எதிராக நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது போன்ற இணையதளங்களை பிளாக் செய்ய வேண்டுமானால் அதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டும். எனவே உடனடியாக இந்த விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.