திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் NH45ல் விழுப்புரம் அருகில் உள்ள ஊர் விக்கிரவாண்டி, பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம், திருச்சி ஆகிய அனைத்து நகரங்களுக்கும் செல்லும் வாகனங்கள் இந்த ஊரை கடந்து செல்ல வேண்டும்.
விக்கிரவாண்டி கூட்டுரோடு அருகில் இருந்து மூன்று நான்கு கிலோமீட்டர் தூரங்களில் பல நேரங்களில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன, இந்த இடங்களில் விபத்துக்குள்ளாக்கும் வாகனங்கள் தலைகீழாக கவிழ்ந்தோ, சாலை ஓரங்களில் உள்ள மரத்தில் மோதியோ அல்லது சாலை அருகில் உள்ள பள்ளங்களில் விழுந்தோ விபத்துக்குள்ளாகின்றனர், விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்த பலரும் சொல்வது என்னவென்றால் வாகனம் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு கிழவி குறுக்கே வந்துவிட்டார், அந்த கிழவி மீது மோதாமல் இருக்க வண்டியை ஒடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளனர். ஆனால் விபத்துக்கு பிறகு அந்த கிழவியை யாரும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்த குறிப்பிட்ட இடத்தில் தொடர் விபத்துகள் நடப்பதும், பல விபத்துகள் ஒரே மாதிரியாக உள்ளதும் பெரும்பாலான ஓட்டுனர்கள் திடீரென குறுக்கே வந்த கிழவியின் மீது வண்டி மோதாமல் இருக்க திருப்பியதால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறிவருவதை அடுத்து அங்கே பேய் நடமாட்டம் உள்ளதாகவும் அதனால் தான் அந்த இடத்தில் தொடர் விபத்துகள் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டுனர்களும் உள்ளூர் மக்களும் கூறுகிறார்கள்.
உண்மையில் அங்கே பேய் நடமாட்டம் உள்ளது என்ற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நான்கு கிலோ மீட்டர் சாலை சரியாக போடப்படாமல் வழக்கும் விதமாக உள்ளதா என்பதை நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்ய வேண்டும்.
இது போன்ற விபத்துகளை நீங்களும் கேள்விப்பட்டிருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.