கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரில் மத்திய அரசின் சிறை அமைந்துள்ளது. இங்கு தண்டனை பெற்ற பல கைதிகள் உள்ளார்கள்.இங்கு உள்ள கைதிகள் சட்டவிரோதமாக செல்போன், சிகரெட், கஞ்சா, மதுபானம்,புகையிலை போன்ற பொருட்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வந்து கொண்டு இருந்தது. இதனால் 15 நாட்களுக்கு முன் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் செல்போன் , புகையிலை போன்ற பல பொருட்கள் சிக்கின. அதன் பிறகு அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறை கைதி ஒருவர் தன்னை பார்க்க வந்த ஒருவருடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவது போன்ற போட்டோக்கள் ஊடகத்தில் வந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற செயல்கள் அங்கு இருக்கும் சிறை அதிகாரி ஒருவரின் துணையுடன் நடப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல அமைப்புகளும் , பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.