கால்பந்து பற்றி சரியாக தெரியாதவர்களிடம் கூட உங்களுக்கு பிடித்த கால்பந்து வீரர் யார் என்று கேட்டால் போர்ச்சுகள் அணியின் ரொனால்டோ அல்லது அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸியை தான் கூறுவார்கள். அந்தளவுக்கு கால்பந்து போட்டியில் இந்த இரு வீரர்களும் பிரபலம். இருவரும் சிறந்த வீரர்கள் என்றாலும் ,இவர்களின் ரசிகர்களுக்கு இடையே எப்போது போட்டி இருந்து கொண்டே இருக்கும் . தமிழ்நாட்டில் விஜய் அஜித் ரசிகர்கள் சண்டையே போல எப்போதும் எதிர்களாக தான் இருப்பார்கள்.
இந்நிலையில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அதில் தனது போட்டியாளராக கருதப்படும் மெஸ்ஸி குறித்தும் கூறியுள்ளார். விளையாட்டு என்று இருந்தால் அதில் போட்டி என்பது இருக்க தான் செய்யும். இப்போது அந்த போட்டி தனது வாழ்க்கையிலும் கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கால்பந்தில் மட்டும் இது போன்ற போட்டி இல்லை. ஃபார்முலா 1 பந்தயத்தில் கூட மெர்சிடஸ் ஃபராரி இடையே கடும் போட்டி இருக்கிறது. இந்த போட்டி தான் ரியல் மாட்ரிட் வந்த பிறகு வந்தது அல்ல , தான் மான்செஸ்டர் யுனிடெட்டில் இருந்ததில் இருந்தே இருந்து வருகிறது. இதனை எப்படி சமாளிப்பது என எனக்கு தெரியும் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.