தமிழகத்தின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி இன்று சென்னையில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். இன்று தமிழகத்தை சீரழித்து கொண்டு இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது மதுக்கடைகளாக தான் இருக்கும். தமிழகத்தை ஆண்டு வந்து கட்சிகள் அண்டை மாநிலங்களிளும் மது விற்பனை நடைபெறுகிறது என்பதை காரணம் காட்டி , தமிழகத்திலும் அதனை செய்து வந்தார்கள். இப்போது தென் மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளா மாநிலம் மதுவிலக்கை அமல்படுத்த திட்டத்தை தொடங்கி விட்டது.
தமிழகத்தில் உள்ள 60 சதவீத மதுக்கடைகள் குடியிருப்பு பகுதிகளில் தான் உள்ளது. எனவே அவற்றை அகற்ற கோரி இன்றுசென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.