சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு முக்கிய காரணம் கட்டிடத்தை சரியாக கட்டாதது தான் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இது தொடர்பாக முழுமையாக விசாரித்து தனது அறிக்கையை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கை தமிழக அரசிடம் இருந்து சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காக இதனை கேட்டுள்ளார்கள். இது குறித்து பதிலளிக்குமாறு மாநில அரசு, மத்திய அரசு, சிபிஐ ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே விரைவில் இந்த வழக்கில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.