இன்று இந்திய பிரதமர் மோடிக்கு 64 வது பிறந்த நாள் ஆகும். ஒரு சாதாரண டீ கடை தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கி, ஒரு மாநிலத்தின் முதல்வராக உயர்ந்து இன்று 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் பிரதமர் என்னும் உயரிய பதவிக்கு சென்றுள்ளார். இவை எல்லாத்துக்கும் முக்கிய காரணம் மக்கள் அவர் மீது வைத்து உள்ள அதீத நம்பிக்கை. மோடி ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இனி மோடியின் ஒவ்வொரு நடவடிக்கையும் உண்னிப்பாக கவனிக்கப்படும். அவர் மீது என்ன தவறு சொல்லலாம் என்று பலரும் நினைத்து வருகிறார்கள். இதையெல்லாம் தாண்டி அவர் மக்களுக்கு செய்வதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் மோடி அதற்காக சரியாக திட்டமிட்ட செயல்பட வேண்டும்.
நமது சற்றுமுன் செய்திகள் சார்பில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.