BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 March 2014

'அம்மா' என்ற சொல் பொதுவானது என்பதால் மறைக்கத் தேவையில்லை: தேர்தல் ஆணையம்


மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மா குடிநீர் பாட்டில்கள் மற்றும் தமிழக அரசின் சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மறைப்பதற்கு உத்தரவிடக் கோரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், அரசின் சிறிய பஸ்களில் இடம்பெற்றுள்ள இலைகள் சின்னம், அம்மா உணவகம் மற்றும் அம்மா குடிநீர் பாட்டில்களில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஆகியவற்றை மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 'அம்மா' என்ற சொல் பொதுவானது என்பதால், அதனை மறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media