BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 March 2014

இரட்டை இலையை ஜடையாகவோ, காதில் தோடாகவோ, நெற்றியில் பொட்டாகவோ வைத்துக் கொள்ளட்டும்; மக்கள் வரிப்பணத்தில் அச்சின்னம் இருக்ககூடாது-ஸ்டாலின்


மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதி செயல் வீரர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின்  பேசியதாவது:

மத்திய சென்னை பொறுத்தவரையில் யாருக்கும் அறிவுரை, ஆலோசனை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து கழகத்தின் கோட்டையாக இத்தொகுதி திகழ்கிறது. ஏற்கனவே இருமுறை இந்த தொகுதியில் தயாநிதி மாறன் தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார்.

சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா என் பெயரை உச்சரித்து உள்ளார். அது மகிழ்ச்சிதான். அரசு பேருந்தில், எம்.ஜி.ஆர். சமாதியில் இரட்டை இலையை மறைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து உள்ளேன். இதுபற்றி அவர் சைக்கிள், கை போன்ற சின்னங்கள் இருக்கிறது. அதற்காக கையை வெட்ட முடியுமா? சைக்கிளை ஓட்டாமல் இருக்க முடியுமா? என்று புத்திசாலித்தனமாக பேசுகிறார்.

இரட்டை இலையை ஜடையாக போட்டுக் கொள்ளட்டும், காதில் தோடாக மாட்டிக் கொள்ளட்டும், பொட்டாக வைத்துக் கொள்ளட்டும், ஆனால் மக்கள் வரிப் பணத்தில் இரட்டை இலை இருக்க கூடாது என்று நாங்கள் கூறுகிறோம்.

இவ்வாறு திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media