16-12-2012 அன்று டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா, 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு ஆயுதங்களால் தாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டார். இதனால் பலத்த காயம் அடைந்த அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் சிறையிலே தற்கொலை செய்து கொண்டான், மேலும் ஒருவன் சிறார் என்பதனால், மற்ற நான்கு பேருக்கு நீதிமன்ற விசாராணைக்கு பிறகு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் நால்வரின் தூக்கை உறுதி செய்தது. இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி 18 வயதுக்கு உட்பட்டிருப்பதால் அவனுக்கு சிறார் நீதிமன்றம், 3 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறுகையில், “இத்தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் தான் எங்களுக்கு முழு மகிழ்ச்சி கிடைக்கும்” என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.