ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று மும்பையில் விக்ரொலி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது :
நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுவதாக பரவலாக கூறப்படுகிறது. நான் உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவிற்கு சென்றேன். இப்போது மும்பைக்கு வந்திருக்கிறேன். எங்கேயும் மோடி அலை வீசுவதாக தெரியவில்லை. மக்களின் அதிருப்தி அலையே எங்கும் வீசுகிறது. காங்கிரசை வெளியேற்றி பா.ஜ.க.வை கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். சில ஊடகங்கள் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடையும் என தவறான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதே ஊடகங்கள் தான் டெல்லி சட்டசபை தேர்தலில் நாங்கள் 4-5 சீட்கள் மட்டுமே பெறமுடியும் என்றன. ஆனால் 28 சீட்டுகளை நாங்கள் பெற்றோம்.
மக்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, நரேந்திரமோடி, கபில் சிபல், நிதின் கட்கரி, எடியூரப்பாவை தோற்கடிக்க தயாராகி விட்டனர். இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் அதிசயம் நடக்கும்.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார். இது குறித்து தங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.