BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 March 2014

இலங்கை போர் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத எதிர்ப்புக்கு எதிரானது;தமிழ் மக்களுக்கு அல்ல- ராஜபக்சே


இலங்கையில் கலே நகரில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு ராஜபக்சே பேசினார். அப்பொழுது அவர், விடுதலைப் புலிகள் என்ற ஒரு பயங்கரவாத அமைப்பை எதிர்த்தே இலங்கையில் போர் நடத்தப்பட்டதே தவிர, போரின் இலக்கு தமிழர்கள் அல்ல என்று தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்களுக்கு எதிராகவே போர் நடத்தப்பட்டது என்றால் இலங்கையின் தெற்கே சிங்களவர் மத்தியில் தமிழர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்களே அது எப்படி சாத்தியமாகும் என்ற‌ கேள்வியை எழுப்பினார். இலங்கையில், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், அதனை மறுத்துள்ள ராஜபக்சே, சில வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இலங்கை மீது அவதூறு பரப்பி வருவதாக கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media