தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும். வன்முறை, லஞ்சம், சாதி போன்ற வற்றிற்கு அப்பாற்பட்ட வேட் பாளரை தேர்வுசெய்ய வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களின் காலில் விழுந்து வணங்கி பிரச்சாரம் செய்து வருகிறது, சத்தியாகிரக இயக்கம். இந்த இயக்கத்தில் நாடு முழுவதும் 50 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.
யாரிடமும் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்கள் காலில் விழுந்து வணங்கும் சத்தியாகிரக பிரச்சார தொடக்க நிகழ்ச்சி, மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நேற்று நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தை, தமிழக இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் தொடங்கி வைத்தார்.
"இதுவரை 51 லட்சம் பேர் காலில் விழுந்து வணங்கி பிரச்சாரம் செய்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் சென்று சத்தியாகிரக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்." என்று எம்.ராமகிருஷ்ண சாஸ்திரி தெரிவித்தார்.
இப்பிரச்சாரத்தை குறித்து தங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.