BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 March 2014

தேவயாணி மீதான விசா மோசடி குற்றச்சாட்டை அமெரிக்கா தள்ளுபடி செய்ய உத்தரவு

அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணை தூதர் தேவயாணி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தனக்கு எதிரான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு  தேவயானி கோப்ரகடே அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், மான்ஹாட்டன் நீதிமன்ற அரசு தரப்பு வழக்கறிஞர் பிரீத் பஹாரா, தேவயானி கோப்ரகடே மீதான குற்றச்சாட்டு பதிவதை நிறுத்தக் கோரிய மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேவயானி சார்பில் அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தேவயாணி மீதான குற்றச்சாட்டு அவருக்கு முழுமையான தூதரக பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர் தான் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது; முழுமையான தூதரக பாதுகாப்பு அளிக்கப்பட்ட பிறகு அமெரிக்காவுக்கு தேவயாணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய அதிகாரம் இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில், மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஷிரா ஸ்கெயிண்டிலின் அளித்த தீர்ப்பில், தேவயானி மீதான விசா மோசடி குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media