டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்று விமானத்தில் சென்ற கெஜ்ரிவால், விமான நிலையத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறி அந்தேரி ரயில் நிலையத்துக்கு சென்றார். அவருடன் அதே ஆட்டோவில் மூன்று ஆம்ஆத்மி நிர்வாகிகளும் பயணம் செய்தனர்.
அந்தேரி ரெயில் நிலையத்தை அடைந்த கெஜ்ரிவால், அங்கிருந்து மின்சார ரயில் மூலம் தெற்கு மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதிக்கு சென்றார். கெஜ்ரிவாலின் ஆட்டோ மற்றும் ரெயில் பயணத்தால் நேற்று மும்பையில் பயணிகள் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த நிலையில் கெஜ்ரிவாலை ஏற்றிச் சென்ற ஆட்டோ பற்றி மும்பை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினார். பிறகு அந்த ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்தனர்.
ஆட்டோவில் 3 பயணிகளுக்கு மேல் ஏற்றிச் சென்றதாக அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் கியூசர் காலித் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.