டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் அழகிரி இன்று காலை சந்தித்தார். சுமார் 15-நிமிட சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்ததாகவும் பதிலுக்கு தாமும் வருத்தத்தை தெரிவித்ததாகவும் கூறினார். 2009-ல் இருந்து 2013 வரை மத்திய அமைச்சரவையில் பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
புதிய கட்சி தொடர்பாக கேள்வி எழுப்பப்ட்டபோது, இது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து 2 மாதங்களுக்கு பின்னரே முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார்.
அழகிரி புதிய கட்சி ஆரம்பித்தால், அவருக்கு இருக்கும் வரவேற்பு குறித்தும், திமுகவிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் உங்களுடைய கருத்தை கமென்டில் தெரிவியுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.