BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 24 June 2014

மோடியின் அமைச்சர்களை இனி மக்கள் எளிதில் சந்திக்கலாம் !!




இப்போது அமைந்து உள்ள அரசின் அமைச்சர்களை மக்கள் இனி எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்றார் மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடெகர். அடுத்த வாரத்தில் இருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார். இதற்காக அவர்கள் பேஸ்புக் , டிவிட்டர் போன்ற சமூக வலைதலங்களை பயன்படுத்த உள்ளார்கள். இதில் மக்களிடம் தங்கள் ஆட்சியை பற்றிய கருத்துகளை கேட்பார்களாம். அதன் மூலம் தங்களின் தவறுகளை திருத்தி கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். அந்தந்த துறைகளில் தங்கள் திட்டங்கள் , அதனை செயல்படுத்தும் முறைகள் ஆகியவற்றை இதன் மூலம் மக்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இது ஒரு வழி பேச்சாக இல்லாமல் இருவரும் பேசி கொள்வதாக இருக்கும். இதன் மூலம் மக்களின் குறைகளை எளிதில் அறிந்து அதனை தீர்த்து வைக்கலாம் .

இதில் அனைத்து மொழிகளையும் சமமாக பார்பார்கள் . ஹிந்திக்கு மட்டும் தனி முக்கியத்துவம் என்பது இருக்காது என்றார்.





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media