ஈராக்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டு இருக்கிறது . தீவிரவாதிகளின் கை ஓங்கி இருக்கிறது . ஈராக்கின் அதிகாரிகள் அமெரிக்காவை வான்வெளி தாக்குதல் நடத்த வேண்டும் என ஈராக் வேண்டுகோள் விடுத்து இருந்தனர் . இதனை அடுத்து அமெரிக்காவில் முக்கிய அமைச்சர்களுடன் ரகசிய சந்திப்பு நடந்தது .
இதனையடுத்து நேற்று ஓபாமா தெரிவிக்கையில் , " 300 ராணுவ ஆலோசகர்களை ஈராக்கிற்கு அனுப்ப உள்ளோம் . எங்களுடைய் எண்ணம் , ஈராக்கில் நடைபெற உள்ள உள்நாட்டுப் போரை தடுப்பதாகும் . ஈராக் நிலை குலைந்து விட்டால் , எங்களின் எதிர்கள் இதை சாதகமாக்கிக் கொண்டு எங்களை தாக்க நேரும் . ஆனால் நாங்கள் இப்போது அங்கே சண்டையிட செல்லவில்லை " என்றார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.