மோடி ஆட்சி வருவதற்கு முக்கிய காரணம் அவர் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார் என்னும் நம்பிக்கையில் தான். அதனை செயலபடுத்துவதற்காக மோடி அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அவர்கள் தீவிர ஆலோசனைக்கு பிறகு இந்தியாவை முன்னேற்ற பாதக்கு செலுத்துவதற்கு 17 அம்ச திட்டங்களை வகுத்துள்ளார்கள். இந்த திட்டங்களை மோடி அரசு பதவி ஏற்று 100 நாளாவது அன்று தெரிவிக்க உள்ளார்கள்.
இது கடலோர விரைவு போக்குவரத்து, தொழிலாளர் பணிகளில் சீர்திருத்தம் என மக்கள் நல திட்டங்களை முன்னிலை படுத்தி உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் இந்த மாதம் 10 ஆம் தேதி அன்று இறுதி செய்யப்பட்டு அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் இது பற்றி விவாதித்து அவர்கள் கருத்துகளை தெரிவிப்பார்கள். அதன் பிறகு இதில் சில மாற்றங்கள் இருக்கலாம்.
மோடி அரசின் 100 வது நாள் செப்டம்பர் முதல் வாரம் வருகிறது, அப்போது இது பற்றி மோடி அறிவிப்பார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.