தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்றாலே தனி மரியாதை இருக்கும். எப்படி நடிக்க வேண்டும் என பலருக்கு கத்து கொடுத்தவர். கிராமப்புற கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். நம் ஊரில் இப்படி மரியாதை கொடுத்தால் கேரள நீதிமன்றம் இவர் தவறு செய்ததாக கூறி இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2013-ம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படமாக 2013-ம் ஆண்டில் வெளியான சுதேவன் இயக்கத்தில் வெளிவந்த "சி.ஆர்.நம்பர் 89" சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகர்களாக 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த விருதுகளை தேர்வு செய்த தேர்வு குழுவின் தலைவராக இயக்குனர் பாரதிராஜா இருந்தார். இதற்காக அவர் திருவனந்தபுரத்தில் 3 நாட்கள் மட்டும் தங்கி இருந்தார். இந்த தேர்வு குறித்த தகவல்களை கேரளாவை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றார். அந்த தகவல்களை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்து உள்ளார். ஏனென்றால் இந்த விருதுக்கான தேர்வில் 85 படங்கள் இருந்தன. விருது கொடுக்கும் ஒருவர் இந்த 85 படங்களையும் முழுமையாக பார்த்து ஆராய்ந்து விட்டு தான் தர வேண்டும். ஆனால் அதற்கு எடுத்த கொண்ட நாட்கள் வெறும் 3 நாட்கள் தான் .
எனவே அவர்கள் படங்களை முழுமையாக பார்க்காமல் விருது கொடுத்து உள்ளார்கள். இந்த விருதுகளை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோர்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி அந்த தேர்வு குழுவில் இருந்த அனைவருக்கும் 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.