சுதந்திர தினத்தின் போது நாம் அனைவரும் பயபக்தியுடன் நமது தேசிய கொடிக்கு மரியாதை கொடுத்து அதனை நமது நெஞ்சில் தாங்குவோம். ஆனால் அதற்கு அடுத்த நாளே அது குப்பையில் இருக்கும். இது தான் நமது மரியாதையா ? அதிலும் பிளாஸ்டிக்கில் செய்யப்படும் தேசிய கொடிகள் மக்காமல் நமக்கு தீங்கு ஏற்படுத்துகிறது. இதனை தடுப்பதற்கு மஹாராஷ்டிர அரசு முயற்சி செய்து உள்ளது.
அதாவது இந்த முறை சுதந்திர தினத்தின் போது பிளாஸ்டிக் தேசிய கொடி தயாரிப்போர் மற்றும் விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. மேலும் தேசிய கொடியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வும் நடத்த உள்ளார்கள். இது ஒரு நல்ல திட்டம் ஆகும். எல்லா மாநில அரசுகளும் இதனை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
சுதந்திர தினம் அன்று தேசிய கொடியை தனது நெஞ்சில் தாங்குபவன் உண்மையான இந்தியன் அல்ல, மறுநாள் அந்த கொடி குப்பைக்கு செல்லாமல் பார்த்து கொள்பவனே உண்மையான இந்தியன். இந்த சுதந்திர தினத்தில் இருந்து உண்மையான இந்தியனாக இருக்க முயற்சிப்போம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.