எல்லா ஊரிலும் பேருந்துகளில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்றால் அது சில்லரை பிரச்சனையாக தான் இருக்கும். அனைவரும் ரூபாய் நோட்டுகளை தருவதால் நடத்துனரிடம் சில்லரை தீர்ந்து விடுகிறது. சில சமயங்களில் நடத்துனர் போதிய சில்லரை வைத்து கொண்டும் தர மாட்டார். சிலர் கேட்டு திரும்பி வாங்கிவிடுவார்கள். சிலர் ஏன் வீண் விவாதம் என கேட்காமல் விட்டுவிடுவார்கள்.
நீங்கள் இனி அவ்வாறு விட்டு விடாதீர்கள், அப்படிப்பட்ட நடத்துனர்களின் மீது நடவடிக்ககை எடுக்கலாம். அதற்கு நாம் 9383337639 என்னும் நம்பருக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். அது மட்டுமில்லாமல் குடித்து விட்டு பேருந்து ஒட்டுவது, செல்போன் பேசி கொண்டு பேருந்து ஒட்டுவது பற்றியும் புகார் செய்யலாம்.
ஆனால் நம்மால் முடிந்த அளவு பேருந்துகளில் செல்லும் போது சில்லரையை எடுத்து செல்ல முயற்சிப்போம். ஏனென்றால் நடத்துனர் பேருந்தில் உள்ள அனைவருக்கும் சில்லரை தருவது என்பது முடியாத காரியம் ஆகும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.