இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைத்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இஷாந்த் சர்மா . ஆனால் அவர் தனது பந்துவீகச்சுக்கு உறுதுணையாக இருந்து உதவியது கேப்டன் தோனி தான் என்றார். போட்டியின் போது ஜடேஜா பந்து வீசிய போது தோனி சற்று பின்னால் தள்ளி நின்றார். இது பலரால் விமர்சனம் செய்யப்பட்டது. குறிப்பாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கேலி செய்தார். சுழற்பந்து வீச்சின் போது விக்கெட் கீப்பர் பின்னால் நின்றால் அது பேட்ஸ்மேன் இறங்கி வந்து ஆடுவதற்கு சுலபமாக இருக்கும் என்றார்.
அவரின் இந்த விமர்சனத்திற்கு தோனி இன்று பதிலளித்தார். லெக் திசையில் 3 பீல்டர்களை நிறுத்த நினைத்தார், ஆனால் விதிமுறையில் அதற்கு இடம் இல்லை. அதனால் லெக் ஸ்லிப்பில் நின்ற தோனியை சற்று தள்ளி நிற்க சொன்னார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பந்து சென்று கொண்டு இருந்தது. அதனை தடுத்து நிறுத்தி கேட்சு வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்வதற்காக சற்று பின்னால் தள்ளி நின்றதாக கூறினார்.
பேட்ஸ்மேன்கள் இறங்கி வந்து ஆடாததால் தோனி இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். ஆனால் எந்த கேட்சும் வரவில்லை என்பதை ஒத்து கொண்டார். இப்போது உள்ள கிரிக்கெட்டில் புதிய உத்திகளை கையாள வேண்டும் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.