BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 18 July 2014

ரயில்வே துறையை மேம்படுத்த மோடி அரசின் 10 அம்ச திட்டங்கள்




ரயில்வே சேவை மக்களுக்கு தரமானவையாக இருக்க வேண்டும் என மோடி அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்காக ரயில்வே துறையின் மூலம் 10 அம்ச திட்டங்களை அறிவித்து உள்ளார்கள். அவை,

* ரயில் நிலையங்கள் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும்.

* மெயில்,எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் நேரமும், சென்றடையும் நேரமும் சரியாக கடைப்பிடித்தல் இருக்க வேண்டும்.

* பயணிகளுக்கு தரப்படும் போர்வைகள் தரமானவையாக இருக்க வேண்டும்.

* காத்திருப்போர் பட்டியல் அதிகம் உள்ள ரயில்களின் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் இருக்க வேண்டும்.

* ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரமானவையாகவும் சரியான விலையிலும் விற்கப்பட வேண்டும்.

* நேரில் சென்று டிக்கெட் எடுப்பவர்களுக்கு வசதியாக தானியங்கி இயந்திரம் ரயில் நிலையங்களில் வைக்கப்படும்.

* விவசாயம் சமந்தமான பொருட்களை ரயிலில் எடுத்து செல்வதற்கு அனுமதி அளித்தல்.

* ரயில் பயண நேரத்தை முடிந்த அளவு குறைத்தல்.

* குளிர்சாதன பெட்டிகளில் குளிர்சாதனங்கள் தரமானவையாக இருக்க வேண்டும். அது சீரான குளிர்ச்சியை தர வேண்டும்.

* சுரங்க பாலம் திட்டங்களை நெடுஞ்சாலை துறையினர் உதவியுடன் விரைந்து முடித்தல்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media