கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தொடக்க பள்ளியில் தீ விபத்து நடந்தது. இது ஜுலை 16 ஆம் தேதி அன்று நடைபெற்றது.இதில் இந்த பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரின் கவனத்தையும் பள்ளிகளின் பக்கம் திருப்பியது.
அதன் பிறகு தான் பள்ளிகளில் இருந்த கூரைகள் அகற்றப்பட்டன. இந்த வழக்கில் ஜுலை 30 ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் என 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 232 பேரை விசாரணை செய்து உள்ளார்கள். ஜுலை 30 ஆம் தேதி வர உள்ள இந்த வழக்கின் தீர்ப்புக்காக பலரும் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.