நேற்று ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் மங்களூருக்கு ஒரு பயணி வந்தார். அவர் துபாயில் இருந்து ஒரு கிலோ தங்கத்தை கடத்தி வந்து உள்ளார். இதனை விமான நிலையத்தில் உள்ள சுகாதார பணியாளரின் உதவியில் கழிவறையில் பாதுகாப்பாக வைத்து உள்ளார். பிறகு அங்கு இருந்து தப்ப முயற்சி செய்து உள்ளார். ஆனால் அதற்குள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் சென்று விட்டது.
அவர்கள் விரைவாக செயலபட்டு தங்கத்தை மீட்டு அந்த பயணியையும், அவருக்கு உதவி செய்த பணியாளரையும் கைது செய்தார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 31.64 இலட்சம் ஆகும். துபாய் - கோழிக்கோடு இடையே தங்கம் கடத்தல் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.
அவர்கள் விரைவாக செயலபட்டு தங்கத்தை மீட்டு அந்த பயணியையும், அவருக்கு உதவி செய்த பணியாளரையும் கைது செய்தார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 31.64 இலட்சம் ஆகும். துபாய் - கோழிக்கோடு இடையே தங்கம் கடத்தல் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.