சென்னை வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகளுக்கு வயது 16, இந்த பெண்ணை திடீரென காணவில்லை, இதையடுத்து அருகில் வசித்து வந்து 15 வயது பையனையும் கடந்த 7–ந்தேதி காணவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.
போலீஸ் விசாரணையில் இந்த பையனும் பெண்ணும் காதலித்தது வீட்டை விட்டு ஓடிப்போய் விழுப்புரத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே எம்.கே.பி. நகர் போலீசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். ஆனால் அப்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசாரும், பெற்றோரும் இவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று முதல் கோர்ட்டுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் இந்த பையனும் பெண்ணும் காதலித்தது வீட்டை விட்டு ஓடிப்போய் விழுப்புரத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே எம்.கே.பி. நகர் போலீசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். ஆனால் அப்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசாரும், பெற்றோரும் இவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று முதல் கோர்ட்டுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.