BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 19 July 2014

ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் போர் அடித்து விட்டதா ?? வருகிறது சேயில்பிஷ் மற்றும் பயர்பாஃஸ் ஓ.எஸ் !!



இந்திய மொபைல் மார்க்கெட்டில் இப்போது அதிகமாக கிடைக்கும் பொபைல்கள் அனைத்திலும் விண்டோஸ் அல்லது ஆண்ட்ராய்ட் அல்லது ஐ-ஓ.எஸ் மட்டுமே காண முடிகிறது . அதிலும் ஆண்ட்ராய்ட் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளதால் அதிகம் பேர் அந்த மொபைல் தான் பயன்படுத்துகின்றனர் .

இந்த மூன்று ஓ.எஸ் தவிர வேறு இல்லையா ??

இருக்கிறது !!! ஆம் , அதுவும் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் .  புதிதாக வர உள்ள ஓ.எஸ் ஜொல்லாவின் சேயில்பிஷ் , பயர்பாக்‌ஸ் மற்றும் உபுண்டுவின் ஓ.எஸ் .

ஜொல்லாவின் சேயில்பிஷ் !!

இந்த ஓ.எஸ்  வெளிநாடுகளில் இருந்தாலும் இனிமேல் தான் இந்தியாவுக்கு வர இருக்கிறது . ஆண்ட்ராய்ட் மொபைலில் இருப்பது போன்று பட்டன்கள் மூலம் ஆப்சன்களை தேர்வு செய்யாமல் கை அசைவுகளினால் வரைவது மூலம் நமக்கு வேண்டியவற்றை தேர்வு செய்யலாம் . இதில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் அனைத்தும் இயங்கும் .

பயர்பாக்‌ஸ் ஓ.எஸ் :

இந்த ஓ.எஸ் ஆண்ட்ராய்ட் போன்று தோற்றமளித்தாலும் விலை குறைந்த மொபைல்களிலும் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் அனைவரும் பயர்பாக்‌ஸ் ஓ.எஸ் பயன்படுத்தும் வகையில் விலை குறைவாக இந்த மொபைல்கள் கிடைக்கும் .   இந்த மொபைலில் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷ்னு மிக குறைந்த மெமரியில் இருக்கும் . 

உபுண்டு ஓ.எஸ் 

இந்த ஓ,எஸ் லினக்ஸ் பயன்படுத்திய அனைவருக்கும் எளிதாக இருக்கும் . அப்படியே  மொபைலுக்கு மாற்றி உள்ளார்கள் . மேலும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் லினக்‌ஸ் பயன்படுத்தி தான் உருவாக்கப் பட்டது என்பதால் ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் அனைவரும் இதை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர் . ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை !!! 







Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media