BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 19 July 2014

மோடி தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து நோட்டீஸ்





மோடி முடிந்த லோக் சபா தேர்தலில் வாரணாசி, வதோதரா என 2 தொகுதிகளில் போட்டியிட்டு , 2 தொகுதியிலும் பெரும்பாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஒருவர் ஒரு தொகுதியில் தான் எம்.பி.யாக இருக்க முடியும் என்பதால் வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதில் இவர் வாரணாசி பெற்ற வெற்றியை எதிர்த்து அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனால் அலகாபாத் ஹைகோர்ட் இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


மோடியின் மீது உள்ள குற்றச்சாட்டுகள் என்னவென்றால், மோடி தனது மனைவி யசோதா பெண்ணின் வருமானம் என்னவென்று கூறவில்லை. மற்றும் தனது பான் கார்டு பற்றிய தெளிவான தகவல்களை அவர் அளிக்கவில்லை. இது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது. தேர்தல் செலவு 70 இலட்சத்துக்குள் தான் இருக்க வேண்டும், ஆனால் மோடி கோடி கணக்கில் செலவு செய்து உள்ளார்.மோடியின் உருவம் பொறிக்கப்பட்ட பனியனகள் மற்றும் தொப்பிகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இது தேர்தல் நடத்தைகளை மீறிய செயலாகும். இதனால் மோடி மீது  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார் மோடியிடன் தோற்ற அஜய் ராய்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media