BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 19 July 2014

சி.எம்.மே கேட்டாலும் சொல்ல முடியாது திமிராக பேசிய வடநாட்டு ஊழியர்கள், சீமான் கைதும் விடுதலையும், உண்மையில் டோல்கேட்டில் நடந்தது என்ன?

திமிராக பேசிய வடநாட்டு ஊழியர்கள், சீமான் கைதும் விடுதலையும், உண்மையில் டோல்கேட்டில் நடந்தது என்ன?

சீமான் நேற்று மதுரை டோல்கேட்டில் கடந்து வரும் போது டோல்கேட் ஊழியர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் பிரச்சினை ஆனது என்றும், அது தொடர்பாக அமித்குமார் என்ற உத்திரபிரதேசத்தை சேர்ந்த டோல்கேட் ஊழியர் சீமான் மீது புகார் அளித்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து இன்று காலை அமித்குமார் தான் சீமான் மீது புகார் அளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து சீமானை மாஜிஸ்திரேட் நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார். நேற்றிலிருந்து சீமான் டோல்கேட்டில் பணம் கட்டாமல் தகராறு செய்ததாக ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதின, ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு.

சீமான் தனது வாகனத்திற்காக பணம் கொடுத்து சுங்க வரி ரசீது எடுத்துள்ளார், அதன் பின் தான் இந்த டோல்கேட் குறித்த தகவல்களை விசாரித்துள்ளார், எவ்வளவு பணம் கட்ட வேண்டும், ஏன் கட்ட வேண்டும், காண்டிராக்ட் எவ்வளவு நாள் உள்ளது என்று விசாரித்தார், ஆனால் சீமான் யார் என தெரியாத வடநாட்டு ஊழியர்கள் மிகுந்த திமிராக பேசியுள்ளனர், மேலும் உங்கள் சி.எம் மே வந்து கேட்டாளும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று திமிராக பேசியதற்கு பிறகே தகராறு ஆரம்பமாகியுள்ளது. இவைகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிந்துள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media