இன்று நடந்த ரயில் விபத்து பிஞ்சு குழந்தைகளின் உயிரை பறித்து விட்டது. இந்த விபத்துக்கும் வழக்கம் போல் ஆளில்லாத ரயில்வே கிராஸிங்கை கடக்க முயன்றதே ஆகும். ஒரு பள்ளி பேருந்து இன்று வழக்கம் போல் பள்ளி செல்லும் 40 மாணவர்களுடன் போய் கொண்டு இருந்தது. இது தெலுங்கானாவில் உள்ள காகடியா டெக்னோ பள்ளிக்கு சொந்தமான பேருந்து.
அந்த பேருந்து மசாய்பேட் கிராமம் அருகே உள்ள ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற போது நான்டெட் - செகந்தரபாத் ரயில் அந்த பேருந்தின் மீது மோதியது. இந்த சம்பவம் 9.10 மணி போல் நடைபெற்றது. அதில் அந்த பேருந்தில் இருந்த 20 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதி 19 மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்திற்கு முக்கிய காரணம் பேருந்தின் ஓட்டுனர் தான் என்று தெரியவந்து உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.