இப்போது எல்லாம் இளைஞர்கள் அனைவரின் கையிலும் இருக்கும் பொருளாக ஸ்மார்ட்போனகள் மாறிவிட்டன. நமது அம்மாக்கள் இப்போது எல்லாம் நம்மை எதற்காக திட்டுகிறார் என்று பார்த்தால், எப்போது பார்த்தாலும் போனும் கையுமாக இருக்கிறாயே என்று தான். நாம் அதற்கு அடிமையாகி விட்டோம் என்று சொன்னால் கூட அதில் தவறு இல்லை. இது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது, அதில் நாம் சராசரியாக 3 மணி நேரம் 18 நிமிடங்களுக்கு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறோம் என்று கூறுகிறது. இது அமெரிக்கர்களை விட அதிகம் ஆகும்.
நாம் சராசரியாக ஒரு நாளைக்கு 77 முறை நமது போன்களை சோதனை செய்கிறோம் ,சிலர் 100 முறை கூட செய்கிறார்கள். நாம் அதிகமாக அதில் உள்ள ஆப்களில் தான் இந்த நேரத்தை செலவிடுகிறோம். இப்போது அதில் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூட அதிகரித்து வருகிறது.
நாம் அதனை பயன்படுத்துவதில் தவறு இல்லை ஆனால் அதற்கு அடிமையாகிவிட கூடாது என்று ஒரு அடிமை கூறுகிறேன்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.