வெளிநாடுகளில் வனவிலங்குகளின் வித்தியாசமான புகைப்படத்தை அனுப்ப அதில் சிறந்த ஒன்றுக்கு ஒரு விருது வழங்கப்படும்.100 நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். 51 வருடங்களாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மார்ஷல் வான் ஒஸ்டன் என்பவரும் இருந்தார். இவர் குரங்கு ஒன்று சுற்றுலா பயணிகளிடம் இருந்து மொபைல் போனை வாங்கி கொண்டு தண்ணீரில் இறங்கி அதனை பார்ப்பது போல ஒரு போட்டோவ எடுத்து அனுப்பி இருந்தார்.
ஆனால் இவரின் இந்த படத்தை ஹாலிவுட் நடிகர் ஆஷ்டன் குச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில் பயன்படுத்தி கொண்டார். இது குறித்து அந்த நடிகர் மீது இவர் குற்றம்சாட்டி இருந்தார். அவர் குற்றம் சுமத்தியதையடுத்து ஆஷ்டன் தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து அந்த படத்தை நீக்கிவிட்டார். இந்த விருதுக்கான வெற்றியாளரின் பெயர் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.