ஒசூரில் இன்று அதிகாலை பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்தது. ஒசூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்னும் நபர். இவருக்கு 30 வயது ஆகிறது. இவர் அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். அவர் இப்போதும் போல் பணியில் இருந்தார். அப்போது பிரகாஷை தேடி அதிகாலை 4.30 மணி போல் 25 வயது மிக்க வாலிபர் வந்து உள்ளார். அவர் பிரகாஷுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இறுதியில் கத்தியால் பிரகாஷை சரமாரியாக குத்தி உள்ளார். இதனால் பிரகாஷ் அலறி உள்ளார். இந்த சப்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் வருவதற்குள் அந்த நபர் தப்பி சென்று விட்டார்.
பிரகாஷை வெட்ட வந்த நபர் சசி என்று கூறப்படுகிறது.இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி விட்டது. சசி என்பவரின் உறவினர் பிரசவத்துக்காக சசி ஏற்கனவே இங்கு வந்து உள்ளார். அப்போது பில் தொகை அதிகமாக இருந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.