சச்சின் விம்பிள்டன் பார்பதற்காக அங்கு சென்று இருந்தார். கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுடன் சேர்ந்து ஆட்டத்தை கண்டு ரசித்தார். மரியா ஷரபோவா ஆட்டம் முடிந்த பிறகு அந்த இருக்கையில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்தவர்கள் யார் என்று தெரியுமா என்றார்கள். அவர் பெக்காம் என்றார். சச்சினை பற்றி கேட்ட போது ,சச்சின் யார் என்றே தெரியாது என்றார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சின்ன பிள்ளைகளுக்கு கூட தெரியும் சச்சினை ,ஷரபோவாவிற்கு எப்படி தெரியாமல் இருக்கும் என அவரது ரசிகர்கள் கோபத்தில் இறங்கினார்கள்.
ஷரபோவாவின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று அவரை கேவலமாக திட்டினார்கள். பேஸ்புக் டிவிட்டர் அதிகம் போட பட்ட பதிவு யார் இந்த ஷரபோவா ? அவரை கலாய்த்து பல ட்ரோல்கள் வந்த வண்ணம் இருந்தன. இப்போது முதல் முறையாக இந்த விவகாரத்தில் ஒரு விளையாட்டு வீராங்கனை ஷரபோவாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா தான். அவர் கூறியது,
கிரிக்கெட் 12 நாடுகளில் விளையாடபடுகிறது, டென்னிஸ் 200 நாடுகளிலும், பேட்மிண்டன் 150 நாடுகளிலும் விளையாடபடுகிறது. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கிரிக்கெட் என்ற விளையாட்டு இருப்பதே பலருக்கு தெரியாது .எனவே ஷரபோவாவின் கருத்தில் எந்த தவறும் இல்லை. தனக்கு கூட மாரடொனா, மெஸ்ஸியை தவிர எந்த கால்பந்து வீரரையும் தெரியாது என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.