குஜராத் , உத்தர பிரதேசம் , மேற்கு வங்களம் , சத்தீஷ்கர் , மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமிக்கும் படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் .
புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு மத்திய அமைச்சரவையில் இடம் பெறாத மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதவியை பெற்று தந்து அவர்களை மன நிறைவு அடைய செய்வதற்காக சில மாநிலங்களின் ஆளுநர்களை பதவி விலகும்படி கேட்டுக் கொண்டது . இதன்படி குஜராத் , உத்தர பிரதேசம் , மேற்கு வங்களம் , சத்தீஷ்கர் , மற்றும் நாகலாந்து ஆகிய ஐந்து மாநிலங்களின் ஆளுநர்கள் ராஜினாமா செய்தனர் . சில மாநிலங்களின் ஆளுநர்கள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டனர் .
புதிய ஆளுநர்கள் பட்டியல் வருமாறு
குஜராத் ஓம்பிரகாஷ் கோஹ்லி
உத்தர பிரதேசம் ராம்நாயக்
மேற்கு வங்களம் கேசரிநாத் திரிபாதி
சத்தீஷ்கர் பல்ராம் தாஸ்
நாகலாந்து பத்மநாப பாலகிருஷ்ணா ஆச்சர்யா
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.