BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 15 July 2014

"விவசாயி ஆகி விடாதே" தற்கொலைக்கு முன் ஒரு தந்தையின் கடைசி வார்த்தைகள்




ஒரு விவசாயின் சாவு மீண்டும் நம்மை கண்ணீர் சிந்த வைத்து உள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் இந்த விவசாயி . இவர் விவசாயத்தினால் பல கடன்களுக்கு ஆளாகி விட்டார். இதனால் அவர் மிகவும் மனமுடைந்து விட்டார். தனது மகனை பள்ளிக்கு பார்க்க சென்றார் . அவனை பார்த்து விட்டு "நீ ஒரு விவசாயி ஆகி விடாதே" என்று மனமுடைந்து கூறியுள்ளார் . பின்பு தனது மகனின் கல்வி குறித்து ஆசிரியரிடம் கேட்டு விட்டு வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்ற அவர் வீட்டில் தூக்கு மாட்டி இறந்து விட்டார். அவரது மகனின் எதிர்காலம் இப்போது சோகம் ஆகி விட்டது.


இது ஒரு விவசாயி நிலை இல்லை , இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நிலை இது தான். அடுத்த வேலை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். பலரும் இன்று விவசாயத்தை துறந்து வேறு வேலை பார்க்க சென்று விட்டார்கள். இன்னும் விவசாயத்தை நம்பி கொண்டு இருந்தால் , அவர்களது குடும்பம் விஷம் குடித்து தான் சாவ வேண்டும் என கருதுகிறார்கள்.


இதே நிலை நீடித்தால் நம் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இது எல்லாத்திற்கு யார் காரணம் என்றால் நம் அரசு தான். நாம் வாழ்வதோ விவசாய பூமி. நம் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயிகளாக இருந்தவர்கள். ஆனால் அப்போது அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நிலைமை இந்தளவுக்கு மோசமாக வந்தும் நம் அரசு திருந்தவில்லை. ஒரு விவசாயி இன்று தனது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கே திணறுகிறான்.

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி , இன்று குறைகளை சொல்வதற்காக கடவுளிடமே சென்று விடுகிறார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media