இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்தது. இங்கிலாந்தின் வெற்றியை தடுத்தவர்கள் என்றால் அது ஜடேஜா, பின்னி , புவனேஷ் குமாராக தான் இருக்கும். அவர்களை இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பாராட்டியுள்ளார். அணிக்கு தேவையான போது நிலைத்து நின்று ஆடிய இவர்களுக்கு தனது வாழ்த்துகளை கூறியுள்ளார். நெருக்கடி சமயங்களில் சமாளிக்கும் அனுபவம் அணியில் இல்லாவிட்டாலும் இந்த வீரர்கள் பொறுப்புடன் விளையாடி அணியை தோல்வியில் இருந்து மீட்டுள்ளனர்.
இந்த போட்டியில் இருந்து தங்கள் தவறுகளை திருத்தி கொள்வோம் என்றார். இனி வரும் போட்டிகளில் உள்ள பிட்சுகள் பின்னிக்கு ஆதரவாக இருக்க கூடியவை என்பதால் அவருக்கு அதிக ஒவர்கள் கொடுக்கப்படும் என்றார். இந்திய எந்த தோல்வியும் பெறாமல் இந்த தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் தோற்றால் தோனியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து வரலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.