வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நமது தேசத்தந்தை காந்தியின் 150 வது பிறந்தநாள் ஆகும். அதனை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காந்தி தான் வாழ்ந்த காலத்தில் இந்தியாவுக்கு சுதந்திரத்தை விட சுத்தமும் சுகாதாரமும் தான் முக்கியம் என கூறி இருந்தார். சுத்தமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது காந்தியின் கனவாக இருந்தது. அதனை நிறைவேற்றும் விதமாக காந்தி ஜெயந்தி அன்று சுத்தமான இந்தியா என்னும் திட்டத்தை மோடி அறிமுகப்படுத்த உள்ளார்.
அதன் முதல் காரியமாக அன்றைய தினம் மோடி அரசின் அமைச்சர்களும் அதிகாரிகளும் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கான துடைப்பம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட்டு விட்டன. அதோடு சுத்தமான இந்தியாவை உருவாக்குவதற்கான பிரச்சாரத்திலும் ஈடுபட உள்ளார்கள். இதன் மூலம் விரைவில் சுத்தமான இந்தியா உருவாகும் என எதிர்பார்க்கலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.