
மேற்கு வங்காள மாநிலத்தில் பாலராம் என்ற இடத்தில் இன்று காலை 3 மணி அளவில் பண்ணையில் கட்டி வைக்கப் பட்டிருந்த மாடுகளை திருட நான்கு பேர் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது கையும் களவுமாக, கிராம மக்களிடம் அவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். பிடிப்பட்ட திருடர்களை கடுமையாக தாக்கி அவர்களை கட்டி வைத்து உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர்அப்பகுதி மக்கள்.
சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த போது, பிடிபட்டவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து சாம்பலாகி இருந்ததாக கூறப்படுகிறாது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.