BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 2 February 2014

ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா பெயர்

                                                   
இந்தியாவின் மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக பன்னிரெண்டு சொகுசு ஹெலிகாப்டர்களை இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கடந்த 2010-ம் ஆண்டு ரூ. 3600 கோடியில் ஒப்பந்தம் செய்தது. இந்த ஹெலிகாப்டர்கள் விற்பனை பேரத்தில் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய கிளையில் பணியாற்றிய பீட்டர் புல்லெட் என்பவருக்கு எழுதிய கடித தகவல்கள் வெளியாகியுள்ளது. கிறிஸ்டியன் மைக்கேல் எழுதிய கடிதத்தில், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பிரணப் முகர்ஜி, வீரப்ப மொய்லி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், எம்.கே. நாராயணன் மற்றும் அகமத் படேல் ஆகியோரில் யாரையாவது தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இந்த கடிதம் இத்தாலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media